Pages

Saturday, March 2, 2013

மாணவர்களுக்கு பிட் அடிக்க உதவி: தேர்வு மையத்தின் அங்கீகாரம் ரத்து

திருவண்ணாமலையில் கடந்தாண்டு, மாணவர்களுக்கு, பிட் அடிக்க உதவிய, மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், அப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு எழுதினர்.
நேற்று துவங்கிய ப்ளஸ் 2 தேர்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 26 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் மொத்தம், 14 இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தாண்டு, திருவண்ணாமலை அடுத்த கன்னக்குறுக்கை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன.

கடந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வின் போது பள்ளி மாணவர்களுக்கு பிட் அடிக்க உதவிய முறைகேட்டில் சிக்கிய திருவண்ணாமலை, "மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி" தேர்வு மையம் ரத்து செய்யப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் எஸ்.ஆர். ஜி.டி.எஸ்., பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.