வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.
அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்," பணிச் சுமை,நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது", என்றார்.
அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்," பணிச் சுமை,நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது", என்றார்.
No comments:
Post a Comment