Pages

Tuesday, March 12, 2013

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்

ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது.
இது தவிர, தேசிய அளவில் 2,80,000 பள்ளிகளில் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 12,46,000 ஆசிரியர்கள் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வே தெரிவிக்கிறது. 2011 -2012 கணக்கின் படி, 10 கோடியே 50 லட்சம் மாணவர்கள் ‘மதிய உணவு திட்டத்தின்’ கீழ் பயனடைகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.