இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.