Pages

Saturday, March 30, 2013

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வின் போது இதுவரை, வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பண்டல்கள் எடுத்துச் செல்லப்பட்டு, முதன்மை கண்காணிப்பாளர் (தலைமை ஆசிரியர்) மற்றும் துறை அலுவலர் (மூத்த ஆசிரியர்) முன்னிலையில் பண்டல்களை பிரிப்பது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு முதல், வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் ஒரு மாணவரையும் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வினாத்தாள் பண்டல் பிரிக்கப்பட்டவுடன், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர் ஒருவரும் கையெழுத்திட வேண்டும் என்று தேர்வுதுறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த முறையை தற்போது நடக்கும் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் இருந்து, தேர்வு துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது தேர்வு துறையின் வெளிப்படை தன்மையும், நம்பகத்தன்மையையும் மாணவர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்த வழிவகுக்கும். வரவேற்கத்தக்கது" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.