Pages

Friday, March 29, 2013

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மார்ச் 25ம் தேதி மத்திய அரசின் தீர்மானத்தின்படி, பிபிஎப் வட்டி விகிதம்
இப்போதுள்ள 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. 2013,14ம் நிதியாண்டு முழுவதும் இது அமலில் இருக்கும். புதிய வட்டி விகிதம் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டங்களை இயக்கி வரும் வங்கிகள், இதுகுறித்த அறிவிப்பை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.