Pages

Monday, February 25, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்

*   பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

*  பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

*  பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

*  பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

*  பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

*  பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

*  பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

*  பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் பாடல் வரிகள்:

"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்"

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

"சாதி இரண்டொழிய வேறில்லை"

"உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"

பொருள்: வண்மை - கொடை, கோணி - சாக்கு, ஞாலம் - உலகம், தமிழ்மகள் - ஔவையார், உழபடை - வேளாண்மை செய்யும் பயன்படும் கருவிகள், பறப்பு - பறக்கும் விமானம் போன்றவை.



Integrate your Ambition
Multiply your Abilities
Eliminate your Weakness
Amplify Success

இலட்சியங்களை வகுத்து
தகுதிகளை பெருக்கி
குறைகளை கழித்து
வெற்றிகளை கூட்டு!

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.