Pages

Thursday, February 7, 2013

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள்
பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
படிப்பில் திறமையான மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் என பிரித்து, காலை-மாலை என தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.