தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில
மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது. இவர்களுக்கு மாதத்தில் 12 அரை நாட்கள் பணி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முடிவிலும் அவர்களின் வருகை குறித்து, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், கணக்கெடுத்து அதற்கான வருகை விபரத்தை, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (அனைவருக்கும் கல்வி திட்டம்) அனுப்புவர். அங்கு பணிச்சுமையால் வருகை விவரம் சம்பள "லிஸ்ட்'டுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்காததால், சம்பளம் கிடைப்பது தாமதமாகிறது. ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதிக்கு பின் தான் இந்த ஆசிரியர்களுக்கு கையில் சம்பளம் கிடைக்கிறது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: பகுதிநேர பணியாக அரசே நியமித்ததால், பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர்கள்கூட, அப்பணியை ராஜினமா செய்துவிட்டு, இந்த வேலைக்கு வந்தனர். பணி நிரந்தரமாகும் நம்பிக்கையில், ரூ.5,000 சம்பளத்திற்கு வேலையில் உள்ளனர். அதைகூட அவர்கள் உரிய நேரத்தில் பெறமுடியவில்லை. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தாலே சம்பளம் வழங்கும் வகையில் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும், என்றார்
கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு : ஆசிரியர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்
ReplyDeleteசென்னை : "முந்தைய தி.மு.க., ஆட்சியில், கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டை, தமிழக அரசு விசாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்க பொதுச் செயலர் கோகுலமணி கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 7,000க்கும் மேற்பட்ட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தங்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்கும் என, காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த தி.மு.க., அரசு, 2008ம் ஆண்டு, அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,880 கணினி ஆசிரியர்களுக்கு, சிறப்புத் தேர்வு நடத்தி, அவர்களில் 1,684 பேருக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கியது. இவர்களில், யாரும் பி.எட்., பட்டதாரிகள் இல்லை. இப்பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேட்டை, தனிக்குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இவ்வாறு கோகுலமணி கூறினார்.
b.ed computer science finish panni job ila ma irukuravanaga life yosichu parunga sir nagga kasatappatu paticha b.ed waste agirichu verum ug with out b.ed yellam eppa job la irukanga .ena koduma sir ethu appa naga evlo feel pananum.nagga ena job than pakurathu sir b.ed yarum padicha ug kuda job tharthu ila .computer science teacher life epavum?????????????????????
ReplyDeleteetharku thirvu than enna ???
11 &12 teacher ena Qualification ugaluku theriyum entha samugam engala pondra b.ed padithavarkali entha akkarayum katuvathilai.tet thervil engalai purakanithuvithu.