Pages

Thursday, February 21, 2013

குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு!

குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடைகளில், ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து, ஒரு வாரத்திற்குள், தேர்வாணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., - வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 16ம்தேதி போட்டித் தேர்வு நடந்தது. இதில், 1.26 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வின் தற்காலிக விடைகள், தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

விடைகளில் ஆட்சேபம் இருந்தால், ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள், தங்களது கருத்துக்களை, தேர்வாணையத்திடம் தெரிவிக்கலாம். தேர்வர்களின் ஆட்சேபணைகள் குறித்து, ஆய்வு செய்து, அதனடிப்படையில், இறுதி விடைகள் வெளியிடப்படும்.

வி.ஏ.ஓ., மதிப்பெண் வெளியீடு: கடந்த ஆண்டு, செப்., 30ல், வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற, இந்த தேர்வின் மதிப்பெண்கள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும், மூன்று கட்ட, "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களும், இனசுழற்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.