Pages

Sunday, January 27, 2013

ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு

2011-12ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய மையத்தில் படித்த, 34 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில், ஏழு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., பணி கிடைத்தது.
சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி, தமிழகத்தில் பணிபுரிய, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தேனி, சுந்தரேசபாபு, கிருஷ்ணகிரி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கர்நாடக மாநிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், பாலமுரளிக்கு, கேரள மாநிலமும்; கரூர், தினேஷ்குமாருக்கு, உ.பி.,யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, பிரதீப் சந்திரன், மணிப்பூர் மாநிலத்திலும்; உ.பி.,யைச் சேர்ந்த, சுவாதி ஸ்ரீ வஸ்தவாவுக்கு, சத்தீஸ்கர் மாநிலத்திலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.