அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்கள் "டபுள் டிகிரி கோர்ஸ்" மூலம் ஒரு வருடத்தில் (பிஏ, பிகாம்) போன்ற இளங்களை பட்டம் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்ற வந்தனர். இதனால் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது.ஆனால் தற்போது தகுதித்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஒரே வருடத்தில் இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.