Pages

Thursday, January 24, 2013

திருவண்ணாமலையில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான கல்வித் திருவிழா நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலி குப்பம் என்ற ஊரின் ராமு ரெட்டியார் உயர்நிலைப் பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. அந்த பள்ளியில் பயின்று வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து, அவர்களுக்கு கல்வி கற்று தந்து தற்போது ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர்.

அவ்வாறு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மேள தாளங்களுடன் வரவேற்பளித்து மாலை அணிவித்துடன் மேடையில் அமரவைத்து மரியாதை செலுத்தினர். ஆசிரியர்களும் தங்களின் மாணவர்கள் எந்தெந்த பதவிகளில் எப்படியெல்லாம உயர்ந்துள்ளனர் என்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.