தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய
திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய முறையையே தொடர வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விக்கும் 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.