விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
அரசாணை 720 ஐ அப்படியே தொடர வேண்டும். டி.டி.எஸ் திட்டத்தை ரத்து செய்து, வி.பி.எப்., க்கு மாற்ற வேண்டும். காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தை உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தை சேர்ந்த 80 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.