Pages

Sunday, January 20, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமே நியமனம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு கடந்த மாதம் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது.அதன்பின்னர் அனைத்து மாவட்டங்களிலும ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் புதிதாக பணியில் சேர்ந்த 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அனைவ ருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) மூலம் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்கான பயிற்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் கடமைகள், அரசின் 14 திட்டங்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 2வது நாளாக இன்றும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.