Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 20, 2013

    பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்

    பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
    அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அ.சு.கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அ.அப்துல்ரஹீம் வரவேற்றார்.
    மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கோ.பொன்னுசாமி, அமைப்புச் செயலர் தெ.கார்த்திகேயன், தலைமையிடச் செயலர் தே.அண்ணாதுரை உள்ளிட்டோர் உரையாற்றினர்.
    6-வது ஊதியக்குழு அறிக்கையை திருத்த அமைத்த ஒரு நபர் குழு அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையக் கோருவது, பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களையக் கோருவது ஆகியவற்றை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வரையில் ஆசிரியர்கள் மொட்டை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

    No comments: