Pages

Friday, December 7, 2012

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு (SURPLUS TEACHERS) விரைவில் மாறுதல் கலந்தாய்வு

மதுரை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், சர்பிளஸ் ஆசிரியர்களுக்கான மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்கிறது. இதையொட்டி, மாவட்டத்தில் அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் குழுவினர், ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதில், சில குழுவினர் சில பள்ளிகளில் உண்மையான விவரங்களை மறைத்து அறிக்கை தாக்கல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்றுனர்கள்  மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இணைந்து மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. நேற்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து, ஆய்வு குழுவினரிடம் தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி ஆலோசனை செய்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.