பலத்த மழையால், கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களில், 3,589 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, கடந்த, 9ம் தேதி, எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல், நேர்முகத் தேர்வு துவங்கியது. நேற்று, பெய்த பலத்த மழையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்பதில் சிரமம் உள்ளதாக, விண்ணப்பதாரர்கள் சிலர் தெரிவித்தனர். மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு, போதிய இடமின்மை காரணமாக, நேற்று முதல் வரும், 1ம் தேதி வரை நடக்கும், நேர்முக தேர்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும், நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.