தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் முறையிலான பணி நியமன கலந்தாய்வு, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கென ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அளிக்கப்பட்ட வீட்டு முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருவோருக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) காலை 7.30 மணி முதலும், பிற மாவட்டங்களில் பணி நியமனம் கோருவோருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்துகொள்பவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரம் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் உரிய நேரத்தில் வரவேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.