Pages

Monday, October 29, 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளி / வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் அனைத்து மாவட்டத்திலும் வட்டார அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று சென்னை மாநிலத் திட்ட
அலுவலகத்தில் இருந்து இப்போட்டிகள் மறு உத்தரவு வரும் வரை "Shiksha Ka Haq Abhiya" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.