அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மற்றொரு தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இப்போதுள்ள அரசாணையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை அரசாணை பெறப்படவில்லை. விரைவில் இந்த அரசாணையைப் பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 2,448 பேருக்கு ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அனைவரது மதிப்பெண்ணையும் மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற 2,246 பேருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
same quality maintain no problem.
ReplyDeletesome body one pass in the examination through.....
others loose their confidence.
Entire money save to government because the government simply tell qualified teachers are not in Tamil nadu.
Why not to reduce the cut of rate from 60% to 55%? (get permission form central government )
More vacancies are in BT assistant. But postponed the appointment because they are not pass TET.
GOD KNOWING ALL ?