Pages

Friday, September 28, 2012

தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டிகே ஜெயின், மதுபிலோகூர் ஆகியோர் இந்த விவகாரத்தில் பிரதமரின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

தண்ணீர் திறந்து விடுவது குறித்து கர்நாடக அரசு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் காவிரியில் இருந்து விநாடிக்கு நாள்ஒன்றுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது,

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.