Pages

Monday, September 24, 2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் உட்கட்டமைப்பு (CCI) குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக பிந்தைய அரசாங்கத்தின் 'பிக் பேங்' சீர்திருத்தம் அறிவிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.7400 கோடி செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் 65 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 72 சதவீதமாக அதிகரித்துள்ளது 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.