Pages

Friday, September 7, 2012

2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது: 

   தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், பதவி உயர்வுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு, நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டு உள்ளன. எந்த மாவட்டத்திலும் பிரச்னை கிடையாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆறு பள்ளிகளில் சேர்ந்த முதுநிலை ஆசிரியருக்கு, சம்பளம் கிடைக்கவில்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும், ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும்.புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு உமா தெரிவித்தார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.