திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ஆக.,27ம் தேதியன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் திடீர் ஆய்வு நடத்தினார். எட்டப்பிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு காலை 9.30 மணிக்கு சென்றிருந்தார். அப்பள்ளியில் ஆசிரியர் வராத காரணத்தால் இறைவணக்கம் கூட நடத்தவில்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு மிகவும் தாமதமாக வந்தனர்.
இதை அடுத்து தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அங்கு கையெழுத்திடாமல் வருகைப்பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு பேர் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.