Pages

Saturday, June 23, 2012

பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து உத்தரவு.

அரசு கடித எண். 20418 / ஈ 1 / 2012 - 1, நாள். 15.06.2012
ஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதாலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாலும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய செயலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அன்றைய தினம் தேர்வுகள் சிறப்பாக நடைபெற விடுமுறை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.