2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை போன்ற அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த இருப்பதாலும் மேற்கண்ட அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட விவரம் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தல் கூடாது எனவும் தலைமையிடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் முன்பு இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் செல்லக்கூடாது எனவும், CUG கைபேசியை எந்நேரமும் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.