தமிழகத்தில் உள்ள
அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும்
எம்.டி.எஸ். முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க
நடத்தப்படும் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இது
குறித்து சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்ட்டுள்ள புதிய
கலந்தாய்வு அட்டவணையில், மே 21ம் தேதி திங்கள் கிழமையன்று அரசு பல்
மருத்துவமனைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதில், பொது ரேங்க் 1 முதல் 20, 57 மற்றும் 71 ஆகிய இடங்களைப் பிடித்த மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.அதே
நாளில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறும் கலந்தாய்வில்,
பொது ரேங்க் 21 முதல் 28, 34, 39, 42, 48 ஆகிய இடங்களைப் பிடித்த மாணவ,
மாணவியர் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.