தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை வாங்க ஆண், பெண் பட்டதாரிகள், ஆசிரியர்கள் குவிந்தனர். டிஎஸ்பி சந்தனபாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் திடீரென விண்ணப்பம் இல்லை என கூறினர்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மறியல் செய்தனர். அப்போது, அரூரை சேர்ந்த ஆசிரியர் கருணாகரனை டிஎஸ்பி சந்தனபாண்டியன் அறைந்தார். அதை தட்டிக்கேட்ட கருணாகரனின் மனைவியான ஆசிரியை ஜீவாவையும் கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தனபாண்டியன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.