Pages

Sunday, May 20, 2012

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த தொடர் ஆய்வு மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8752 / ஜே 1 / 2012, நாள். 17.05.2012.
தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - ஊராட்சி / அரசு / நகராட்சி / உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பான நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த தொடர் ஆய்வு மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
அனைத்து மாவட்டங்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் சார்பான கூட்டம் 28.05.2012 அன்று காலை 10.00 மணிக்கு  சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு கீழ்கண்டவாறு வழக்கிற்கு ஆய்வுகள் எடுத்து 
கொள்ளப்படும்
* நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
* தீர்ப்பாணை பெறப்பட்டு செயல்படுத்தாமல் நிலுவையில் உள்ள வழக்குகள்
* எதிர்வாதவுரை தாக்கல் செய்யப்பட்ட மற்றும் எதிர்வாதவுரை தாக்கல் செய்யப்படாத வழக்குகள். 
ஆகிய வழக்குகள் சார்ந்த விவரங்களை தொகுத்து வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.