Pages

Saturday, April 14, 2012

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக புதிய அதிகாரிகள் குழுவினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நிதித்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. செலவினச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, மூன்று மாதத்தில் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்தக் குழுவில் பத்மநாபன், உமாநாத் ஆகிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்பை அரசு அலுவலர் சங்கம் வரவேற்றுள்ளது.
நன்றி : புதியதலைமுறை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.