To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Saturday, March 24, 2012
நாட்டின் முதல் மெடா பல்கலையை அமைக்க திட்டம்.
நாட்டிலேயே முதன்முறையாக, டெல்லியில், மெடா பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி கூறியதாவது: டெல்லியில், நாட்டிலேயே முதன்முறையாக, Meta பல்கலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா கல்வி நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி-டெல்லி ஆகிய கல்வி நிறுவனங்கள், இப்பல்கலையை உருவாக்குவதில் துணைபுரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Meta பல்கலையை உருவாக்குவதன் மூலமாக, ஐஐடி-கான்பூரில் படிக்கும் ஒரு மாணவர், ஆதிகால வரலாறு(ancient History) படிப்பிற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலையில் சேர்வதையும், ஐ.ஐ.எஸ்.சி-பெங்களூரில் படிக்கும் ஒரு கணித மாணவர், இலக்கியப் படிப்பிற்காக, ஜாதவ்பூர் பல்கலையில் சேர்வதையும் சாத்தியமாக்க முடியும்.
இந்த Meta பல்கலையானது, தேசிய அறிவு நெட்வொர்க் திட்டத்தை வலுப்படுத்தும். இந்த தேசிய அறிவு நெட்வொர்க் திட்டமானது, ஏற்கனவே, உயர்வேக, பைபர் அடிப்படையிலான ப்ராட்பேண்ட் இணைப்பு மூலமாக, பல முக்கிய கல்வி நிறுவனங்களை இணைத்துள்ளது.
இந்தக் கல்வி நிறுவனங்களில் தற்போது இருக்கும் வள ஆதாரங்கள் மற்றும் திறன்கள் போன்றவை பயன்படுத்தப்படும் மற்றும் இதற்கான தனி நிதியாதாரங்கள் தேவையில்லை.
இணைந்து செயல்படுவதற்கான துறைகள் மற்றும் Meta பல்கலை மூலமாக வழங்கப்படவுள்ள பாடங்கள் குறித்து இந்தக் கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.