To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Thursday, March 29, 2012
தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் / மாணவர்கள் வகுப்பறையில் கைப்பேசியினை பயன்படுத்த தடை.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 004027 / J3 / 2012, நாள். 22.02.2012.
தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் வகுப்புகள் நடத்தும் போது கைப்பேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கைப்பேசியினை Silent Mode / Offline Mode செய்ய வைத்து பள்ளியின் செயல்பாடுகளில் கற்பித்தல் பணிக்கு எந்தவிதமான இடையுறு ஏற்படாவண்ணம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளும் பள்ளி வளாகத்தில் கைப்பேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாணவ / மாணவியர் பள்ளி வேலை நேரத்தில் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பெற்றோர்களுக்கு அறிவித்து தங்கள் குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும். கூடுமானவரை மாணவ / மாணவியர் பள்ளிகளுக்கு கைப்பேசி கொண்டுவருவதை தவிர்க்க தக்க நடவடிக்கை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.